இந்தியா

செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு புதிய திட்டம்

ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தலைத் தடுக்க ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.காந்தாராவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தலைத் தடுக்க ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.காந்தாராவ் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு ஜவ்வாது மலை அடிவாரத்தில் மதுபான கடைகளில், மது வாங்கி கொடுத்து செம்மரம் வெட்ட அனுப்பி வைக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்து உள்ளதாக அவர் கூறினார். செம்மரம் வெட்டுவதற்காக வரும் மேஸ்திரிகள் , கூலி தொழிலாளர்களை கண்டறிந்து வனப்பகுதிக்கு செல்வதற்கு முன்பே பிடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களின் கைரேகை அடிப்படையில், அவர்களது வங்கி கணக்கையும் கண்காணிக்க முடிவு செய்துள்ளதாகவும் காந்தாராவ் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்