இந்தியா

இளம் காதல் தம்பதி தற்கொலை : தனியாக வசித்து வந்த நிலையில் விபரீத முடிவு

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இளம் காதல் தம்பதி தற்கொலை செய்துக்கொண்டது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தந்தி டிவி

காஜுவாக பகுதியில், நரேந்திரா மற்றும் டில்லீஸ்வரி கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனி வீடு எடுத்து அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை அவர்கள் வசித்த வீட்டில், மின்விசிறியில், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 9 மாதங்களுக்க முன் திருமணம் செய்துக்கொண்டு, தனியாக வசித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்