இந்தியா

இளம் காதல் தம்பதி தற்கொலை : தனியாக வசித்து வந்த நிலையில் விபரீத முடிவு

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இளம் காதல் தம்பதி தற்கொலை செய்துக்கொண்டது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தந்தி டிவி

காஜுவாக பகுதியில், நரேந்திரா மற்றும் டில்லீஸ்வரி கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனி வீடு எடுத்து அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை அவர்கள் வசித்த வீட்டில், மின்விசிறியில், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 9 மாதங்களுக்க முன் திருமணம் செய்துக்கொண்டு, தனியாக வசித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ