இந்தியா

காஷ்மீர் பனிலிங்கத்தை தரிசிக்க - அமர்நாத் யாத்திரை முதல் குழு பல்தால் பகுதியை அடைந்தது

காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை செல்லும் முதல் குழு, பல்தால் பகுதியை அடைந்தது

தந்தி டிவி

அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க நேற்று ஜம்மு மலையடிவார ராணுவ முகாமில் இருந்து, அமர்நாத் யாத்திரை செல்லும் முதல் குழு புறப்பட்டது. இந்தக் குழு பல்தால் பகுதியை நேற்று இரவு சென்றடைந்தது. அவர்களை கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்று உணவு அளித்தனர். அங்கிருந்து அந்த குழுவினர், இன்று அமர்நாத் யாத்திரையை தொடங்குகின்றனர். முன்னதாக, காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் அந்த குழுவினர் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையின்போது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். அதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை