இந்தியா

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா நீக்கம் - உயர்மட்ட தேர்வுக்குழு அதிரடி முடிவு

சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா மீண்டும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மா மீண்டும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிபிஐ-ன் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு, இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அலோக் வர்மாவிற்கு எதிரான புகார்கள் குறித்த மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் அறிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதலில், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை, மீண்டும் பணியமர்த்துமாறு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அலோக் வர்மா மத்திய தீயணைப்பு துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்