இந்தியா

திருப்பதி பட்டு வஸ்திர கொள்முதலில் ரூ.50 கோடி ஊழல்? - அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பட்டு வஸ்திரத்தில், 50 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் விஐபி-க்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில், பட்டு வஸ்திரம் போர்த்தி மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்டு வஸ்திரங்களை டெண்டர் மூலம் தேவஸ்தானம் கொள்முதல் செய்து வந்தது.

ஆனால் டெண்டர் எடுத்த நபர்களுடன் தேவஸ்தான கொள்முதல் துறையினர் கூட்டு சேர்ந்து, தூய மல்பரி பட்டுக்கு பதிலாக 100% பாலிஸ்டர் மூலம் நெய்யப்பட்ட வஸ்திரங்களை கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது.

இதன்மூலம் வெறும் 300 ரூபாய் மதிப்புள்ள வஸ்திரங்களை, கூரைப்பட்டு வஸ்திரங்கள் என்று கொள்முதல் செய்து, 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றது அம்பலமாகி இருக்கிறது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேவஸ்தான நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்