இந்தியா

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த air purifier என்று அழைக்கக்கூடிய காற்று சுத்திகரிப்பான் நிறுவ, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

காற்று மாசு விவகாரத்தில், வாகன கட்டுப்பாடு திட்டத்தை விதித்த டெல்லி அரசின் நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு , நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகன கட்டுப்பாடு திட்டத்தால் பலன் ஏற்பட்டுள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, பலன் ஏற்படவில்லை என்று மத்திய

மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த நிலையில், காற்றின் தரம், 5 முதல் 15 சதவீதம் மேம்பட்டுள்ளதாக, டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நகரம் முழுவதும், மாசுவை கட்டுப்படுத்த, காற்று சுத்திகரிப்பான் நிறுவும் திட்டத்தை கொண்டுவர, மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்