இந்தியா

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த air purifier என்று அழைக்கக்கூடிய காற்று சுத்திகரிப்பான் நிறுவ, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

காற்று மாசு விவகாரத்தில், வாகன கட்டுப்பாடு திட்டத்தை விதித்த டெல்லி அரசின் நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு , நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகன கட்டுப்பாடு திட்டத்தால் பலன் ஏற்பட்டுள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, பலன் ஏற்படவில்லை என்று மத்திய

மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த நிலையில், காற்றின் தரம், 5 முதல் 15 சதவீதம் மேம்பட்டுள்ளதாக, டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நகரம் முழுவதும், மாசுவை கட்டுப்படுத்த, காற்று சுத்திகரிப்பான் நிறுவும் திட்டத்தை கொண்டுவர, மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி