இந்தியா

நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது

ஊரடங்கு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

* மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், கடந்த 21ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 3 ஆம் தேதி நிலவிய காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டது.

* அதில், நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

* தலைநகர் டெல்லியில், 186ஆக இருந்த காற்று மாசு தரம் 79 ஆக குறைந்துள்ளது. குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் 147 இல் 91 ஆகவும்,

* மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் 128 இல் இருந்து 108 ஆகவும், கர்நாடகா மாநில தலைவர் பெங்களூருவில் 105 ல் இருந்து 69ஆகவும்

* தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 90 - 73 ஆக குறைவு, தமிழக தலைநகர் சென்னையில் 70 - 56 ஆக குறைந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

* இன்னும் ஊரடங்கு முடிவதற்கு ஒரு வார காலம் இருப்பதால், காற்றின் மாசு அளவு மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்