Air India | நடுவானில் திடீர் அதிர்ச்சி.. பைலட்டின் சாதுர்ய முடிவால் தப்பிய பல உயிர்கள் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சில் கோளாறு காரணமாக ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சில் கோளாறு இருக்கலாம் என விமானிகள் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய சோதனையில் எந்த குறையும் கண்டறியப்படவில்லை என்றும் ஏர் இந்தியா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.