இந்தியா

ஏர் இந்தியா எஸ்ஏடி வழக்கு; ஸ்வப்னா சுரேஷ் கைது குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

தந்தி டிவி
ஏர் இந்தியா எஸ்ஏடி வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் சிறையில் இருந்த ஸ்வப்னா சுரேஷ் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்வப்னா சுரேஷை 10 நாட்கள் காவலில் வைக்கக் கோரி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,. ஏர் இந்தியா அதிகாரி எல்.எஸ். சிபு மற்றும் முன்னாள் ஏர் இந்தியா சாட்ஸ் துணைத் தலைவர் பினாய் ஜேக்கப் ஆகியோர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை ஸ்வப்னா சுரேஷ் முன்வைத்திருந்தார்,. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் உடல்நிலையை உறுதிப்படுத்துமாறு அவரது தாயார் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை