இந்தியா

Air India Issue | 200 பேரை பலி கொண்ட அகமதாபாத் கோரம் - மீண்டும் எதிரொலிக்கும் அந்த கோரிக்கை

200 பேரை பலி கொண்ட அகமதாபாத் கோரம் - மீண்டும் எதிரொலிக்கும் அந்த கோரிக்கை

thanthitv

Air India Issue | 200 பேரை பலி கொண்ட அகமதாபாத் கோரம் - மீண்டும் எதிரொலிக்கும் அந்த கோரிக்கை "அனைத்து போயிங் விமானங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்" அனத்து போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய விமானிகள் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.ராந்தவா தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய விமானிகள் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.ராந்தவா, கடந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட அகமதாபாத் விமான விபத்து நிகழ்ந்த நாளில் இருந்து, அனைத்து போயிங் 787 விமானங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து இயக்குநரம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்