இந்தியா

இந்திய விமானப்படையின் ஏஎன் - 32 ரக போர் விமானம் 13 பேருடன் மாயம்

அசாம் மாநிலம் ஜோர்ஹாத் விமானப்படைத்தளத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட AN - 32 ரக விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

அசாம் மாநிலம் ஜோர்ஹாத் விமானப்படைத்தளத்தில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட AN - 32 ரக விமானம் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்டனோவ் 32 எனப்படும் இந்த விமானத்தில், 8 விமானப்படை வீரர்கள் மற்றும் 5 பயணிகள் என 13 பேர் பயணம் செய்தனர். அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்தின்

மெச்சுக்கா பள்ளத்தாக்கு நோக்கி பகல் 12.30 மணிக்கு விமானம் புறப்பட்டது. ஆனால், விமானம் அங்க தரையிறங்கவில்லை. இறுதியாக பகல் 1 மணி அளவில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து, காணாமல் போன AN-32 ரக விமானத்தை தேடும் பணியில், சுகோய் 30 மற்றும், சி 130 ரக சிறப்பு தேடுதல் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. சீன எல்லையையொட்டியுள்ள, அருணாசல பிரதேச வான்பகுதியில் பறந்த போது விமானம் மாயமானதாக, முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை