இந்தியா

"AICTE அனுமதிக்கு பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்" - தேதி குறித்த ஏஐசிடிஇ | AICTE | Thanthi TV

தந்தி டிவி

ஏஐசிடிஇ AICTE அனுமதியை பெறுவதற்கு, ஜனவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை, பொறியியல் கல்லூரிகள் அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2025-26 ம் கல்வியாண்டில், பாடப்பிரிவு மற்றும் கல்லூரி இடங்களுக்கான ஏஐசிடிஇ அனுமதியை பெறுவதற்கு, பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், பொறியியல் கல்லூரிகள் மீண்டும் ஏஐசிடிஇ அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2 வரை, அபராதத்துடன் பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த பின்னர் பொறியியல் கல்லூரிகளில் பல்கலைக்கழக உயர்மட்டக்குழு ஆய்வு செய்யும் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

மேலும், உரிய கலவித் தகுதியின் அடிப்படையிலேயே ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமெனவும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்