திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நடிகை மாளவிகா மோகன் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்குள் சென்ற அவர், பக்தியுடன் ஏழுமலையானை வழிபட்டார். தரிசனத்திற்குப் பிறகு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில், அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் முறையாக திருப்பதிக்கு வந்துள்ளதாகவும், தற்போது நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் கார்த்தியுடன் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.