இந்தியா

பெண்கள் குறித்து அவதூறு கருத்து - சம்பந்தப்பட்டவரை தாக்கிய பெண் கலைஞர்கள்

கேரளாவில் சமூக வலைதளங்களில் பெண்கள் பற்றி ஆபாசமாக பேசி அவதூறு பரப்பியவரை பின்னணி குரல் கலைஞர்கள் தாக்கி மன்னிப்பு கேட்க வைத்தனர்.

தந்தி டிவி
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் பி. நாயர் என்பவர் தனது யூ டியூப் சேனலில் பெண்ணியம் பேசும் பெண்கள் குறித்து ஆபாசக் கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பின்னணி குரல் கலைஞர் பாக்கியலட்சுமி உள்பட மூன்று பெண்கள், விஜய் அலுவலகத்திற்கு சென்று அவரை கடுமையாக தாக்கி மன்னிப்பு கேட்க வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெண்களின் துணிச்சலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பாராட்டியுள்ளார். அதேநேரம், தாக்குதல் நடத்திய மூன்று பெண்கள் மீது தம்பானூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்