இந்தியா

அல்லு அர்ஜுனின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல திட்டம்? - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

அல்லு அர்ஜுனின் இடைக்கால ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல தெலங்கானா போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2 படத்தின் பிரிமியர் காட்சியின் போது, படம் பார்க்க சென்ற ரேவதி என்ற பெண்மணி நடிகர் அல்லு அர்ஜுனின் திடீர் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகனும் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனர். பின்னர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வாங்கிய பிறகு சனிக்கிழமை காலை அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அல்லு அர்ஜுன் தரப்பு வழக்கறிஞர்

ஜாமீன் ஆவணம் வெள்ளிக்கிழமை இரவே கிடைத்துவிட்டதாகவும், சிறை நிர்வாகம் திட்டமிட்டே அல்லு அர்ஜுனை இரவு முழுவதும் சிறையில் வைத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், அல்லு அர்ஜுனின் இடைக்கால ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல தெலங்கானா போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

TN DGP | ``இனி கட்டாயம்.. கட்டாயம்’’ - தமிழக DGP-க்கு பறந்த அதிரடி உத்தரவு

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி