இந்தியா

ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு : அருண்ஜெட்லி வரவேற்பு

ஆதார் வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆதார் வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதார் வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை, உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது என்றார். ஆதார் திட்டத்தை காங்கிரஸ் கட்சி தான் அறிமுகம் செய்தது என்று கூறிய அவர், ஆனால், அக்கட்சிக்கு, அதுபற்றி எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டார். தேசிய டிஜிட்டல் தொலைத்தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, அருண்ஜெட்லி தெரிவித்தார்

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு