ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில் மூடப்பட்டு இருந்த, தனியாருக்கு சொந்தமான விவசாய மருந்து கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், கடை முழுவதும் தீ பற்றியதால், சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மேலும் தன் கண் முன்னே, கடை எரிந்து கருகியதை பார்த்த கடையின் உரிமையாளர், கதறி அழுதது அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது