இந்தியா

நடுவானில் விமானத்தில் ஜம்மென பிறந்த சாகச குழந்தை

தந்தி டிவி

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் பறந்தபோது, தாய்லாந்து பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையை பெற்றெடுத்தார்.

மஸ்கட்டில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த தாய்லாந்து பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் இருந்த செவிலியர் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்தனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறக்கப்பட்டதும், அந்தப் பெண்ணும், குழந்தையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், அந்தப் பெண்ணும், குழந்தையும் தாய்லாந்து செல்வதற்கு மும்பையில் உள்ள தாய்லாந்து துணைத் தூதரகத்துடன் தொடர்பில் உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்