இந்தியா

பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சா பறிமுதல்...

ஆந்திர மாநிலத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பிரகாசம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், குறிப்பிட்ட பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 9 பேரின் உடமைகளை சோதனை செய்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை