இந்தியா

பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சா பறிமுதல்...

ஆந்திர மாநிலத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பிரகாசம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், குறிப்பிட்ட பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 9 பேரின் உடமைகளை சோதனை செய்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ