இந்தியா

8 வழிச்சாலை திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? - உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி

எட்டு வழிச்சாலைக்கு இடம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான வழக்கில், அந்த திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

தந்தி டிவி

எட்டு வழி சாலைக்கு இடம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று உள்ள நிலையில் பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எட்டு வழி சாலை சட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது இத்திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை