இந்தியா

5 மாநில தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலில் பணியாற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமை தாங்கினார். தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், சுதந்திரமான, நியாயமான மற்றும் எந்த தூண்டுதலும் இல்லாத தேர்தலுக்கான சமநிலையை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோர்ருக்கு எளிதான வாக்குச்சாவடி அணுகுமுறை போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்காளர் பட்டியல் என்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

School Van| கவிழ்ந்த ஸ்கூல் வேன்.. அலறி ஓடிய டிரைவர்

Power Tariff | CTR Nirmalkumar|``கரண்ட் பில் உயர்வுக்கு திமுக தான் காரணம்’’ - அமைச்சர் CTR ஒரே போடு

Telegram Ban | இந்தியாவில் டெலிகிராமுக்கு தடை விதித்தது அரசு.. நெட்டிசன்களுக்கு பேரிடி

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி