திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் ஊஞ்சல் சேவை வைபவம் விமர்சையாக நடைபெற்றது. கோவில் அருகே உள்ள ஊஞ்சல் சேவை மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசுவாமி ராஜ அலங்காரத்தில் செங்கோலுடன் காட்சி அளித்தார். இந்த ஊஞ்சல் சேவை வைபவத்தில் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.