இந்தியா

40,845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு - மத்திய சுகாதாரத் துறை தகவல்

இந்தியாவில் இதுவரை 40 ஆயிரத்து 845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் இதுவரை 40 ஆயிரத்து 845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு கருப்பு பூஞ்சை பாதிப்பு தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்,

இதுவரை 40 ஆயிரத்து 845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை, 3 ஆயிரத்து 129 ஆக உயர்ந்து உள்ளது என்றும்,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 ஆயிரத்து 940

பேர், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதில், 26 ஆயிரத்து187 பேர் நீரிழிவு நோயாலும், 523 பேர் ஸ்டீராய்டு உட்கொண்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இது தவிர, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட18 முதல் 45 வரையுள்ள நோயாளிகள் 32 சதவீதம் எனவும்,

45 முதல் 60 வயதுடையோர் 42 சதவீதம், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 24 சதவீதம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை