இந்தியா

3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி

சோழவரம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மளிகை கடை ஒன்றிலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை சிலர் வாங்கி வருவதை கண்டு மளிகை கடை உரிமையாளரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட 3டன் குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் முருகன் மற்றும் சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

750 கிலோ குட்கா பறிமுதல்

கோவை தாமஸ் வீதியில் உள்ள கடை ஒன்றில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர் . அப்போது அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த

750 கிலோ குட்கா பாக்கெட்டுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர் .

தொடர்ந்து கோவை ஒப்பணக்கார வீதி , ராஜ வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை