இந்தியா

3 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி

சோழவரம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மளிகை கடை ஒன்றிலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை சிலர் வாங்கி வருவதை கண்டு மளிகை கடை உரிமையாளரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட 3டன் குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் முருகன் மற்றும் சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

750 கிலோ குட்கா பறிமுதல்

கோவை தாமஸ் வீதியில் உள்ள கடை ஒன்றில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர் . அப்போது அங்கு மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த

750 கிலோ குட்கா பாக்கெட்டுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர் .

தொடர்ந்து கோவை ஒப்பணக்கார வீதி , ராஜ வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்