இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

புல்வாமா ராணுவ தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தந்தி டிவி

புல்வாமா ராணுவ தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில்

தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், வீடு ஒன்றில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதில் கடந்த மாதம் 14ம் தேதி புல்வாமாவில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த வாகனம் தயார் செய்து கொடுத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த முதாசிர் அகமது கான் மற்றும் ஷஜாத் பட் ஆகியோரும் அடங்குவர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை