இந்தியா

2ஜி வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு..

தந்தி டிவி

2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை செப்டம்பர் இறுதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. எதிர் மனுதாரர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால், சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி வைத்திருக்க கூடாது என்று அவருடைய தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிபதி, ஆகஸ்ட் 28 முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி