இந்தியா

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு: விசாரணை டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தந்தி டிவி
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுக்கள், நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முன்வைத்து வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிபிஐ பதிவு செய்த குற்றப்பத்திரிகையை வாசிக்க மேலும் 2 நாட்கள் அனுமதித்ததுடன், விசாரணையை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதேபோல், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு