இந்தியா

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு: விசாரணை டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தந்தி டிவி
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுக்கள், நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முன்வைத்து வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிபிஐ பதிவு செய்த குற்றப்பத்திரிகையை வாசிக்க மேலும் 2 நாட்கள் அனுமதித்ததுடன், விசாரணையை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதேபோல், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு