இந்தியா

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு: விசாரணை டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தந்தி டிவி
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுக்கள், நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முன்வைத்து வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிபிஐ பதிவு செய்த குற்றப்பத்திரிகையை வாசிக்க மேலும் 2 நாட்கள் அனுமதித்ததுடன், விசாரணையை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதேபோல், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு