இந்தியா

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு: விசாரணை டிச.9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2-ஜி வழக்கில், சிபிஐ தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தந்தி டிவி
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுக்கள், நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முன்வைத்து வாதிட்டார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சிபிஐ பதிவு செய்த குற்றப்பத்திரிகையை வாசிக்க மேலும் 2 நாட்கள் அனுமதித்ததுடன், விசாரணையை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதேபோல், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை