28 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்து தீப்பிடிக்க தொடங்கியவுடன் உடனடியாக பயணிகள் இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கேரள மாநிலம் மணிமாலா பகுதியில் இருந்து இடுக்கிக்கு சென்ற பேருந்தில் திடீரென புகை வருவதை பார்த்ததும் ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறங்க அறிவுறுத்தினார். இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து எலும்புகூடு போல் மாறியது..