இந்தியா

தமிழகத்துக்கு 205000 ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் தகவல்

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, மாநிலங்களுக்கு வரும் 16 ஆம் தேதி வரையிலான தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, மாநிலங்களுக்கு வரும் 16 ஆம் தேதி வரையிலான தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ரெம்ட்சிவிர் தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, அதன் போதுமான கையிறுப்பை உறுதிசெய்யும் வகையில், வரும் 16 ஆம் தேதி வரைக்கான ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா இன்று ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும், அனைத்து மாநில மருந்து துறை, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முறையான விநியோகம் நடைபெறுகிறதா என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.ஏப்ரல் 21 முதல் மே 16 ஆம் தேதி வரை 53 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 2.05 லட்சம் குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்