இந்தியா

தமிழகத்துக்கு 205000 ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் தகவல்

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, மாநிலங்களுக்கு வரும் 16 ஆம் தேதி வரையிலான தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த, மாநிலங்களுக்கு வரும் 16 ஆம் தேதி வரையிலான தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ரெம்ட்சிவிர் தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, அதன் போதுமான கையிறுப்பை உறுதிசெய்யும் வகையில், வரும் 16 ஆம் தேதி வரைக்கான ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா இன்று ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும், அனைத்து மாநில மருந்து துறை, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முறையான விநியோகம் நடைபெறுகிறதா என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.ஏப்ரல் 21 முதல் மே 16 ஆம் தேதி வரை 53 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 2.05 லட்சம் குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ