இந்தியா

சபரிமலைக்கு செல்ல 2 பெண்கள் முயற்சி : தடுத்து நிறுத்தி பக்தர்கள் முழக்கம்

பக்தர்களின் எதிர்ப்பால், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற இரண்டு பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தந்தி டிவி

கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த் மற்றும் சாமிலா சஜீஷ் ஆகிய இருவரும், ஆறு ஆண்களுடன் சபரிமலை செல்ல முற்பட்டனர். பம்பையில் இருந்து வந்து கொண்டிருந்த அவர்களை, நீலிமலைப் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பெண்கள் வரும் தகவல் வேகமாக பரவியதை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள், பெண்களை சூழ்ந்துள்ளனர். கேரள மாநில உதவி காவல் ஆணையர் பிரதீப் குமார், இரண்டு பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரண்டு பெண்களும், போலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு