இந்தியா

வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி..

தந்தி டிவி

தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த முதலாமாண்டு மாணவர்கள் 8 பேர், வாளையாறு அணையில் குளிக்கச்சென்றுள்ளனர். அப்போது, திருப்பதி, சண்முகம், விஷ்ணுகுமார் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாகவும், உள்ளூர் இளைஞர்கள் விஷ்ணுவை மட்டும் மீட்டதாவும் கூறப்படுகிறது. நீரில் மூழ்கிய மற்ற இரு மாணவர்களை சுமார் 5 மணி நேர தேடுதலுக்கு பின் கேரள தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர். அணையில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை மீறி மாணவர்கள் குளித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்