இந்தியா

வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி..

தந்தி டிவி

தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த முதலாமாண்டு மாணவர்கள் 8 பேர், வாளையாறு அணையில் குளிக்கச்சென்றுள்ளனர். அப்போது, திருப்பதி, சண்முகம், விஷ்ணுகுமார் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாகவும், உள்ளூர் இளைஞர்கள் விஷ்ணுவை மட்டும் மீட்டதாவும் கூறப்படுகிறது. நீரில் மூழ்கிய மற்ற இரு மாணவர்களை சுமார் 5 மணி நேர தேடுதலுக்கு பின் கேரள தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டனர். அணையில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை மீறி மாணவர்கள் குளித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை