காஷ்மீரில் இரண்டு சீக்கிய பெண்களை கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்யப்பட்டதை கண்டித்து சீக்கிய சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பாவின் எல்லைப் பகுதியான ராம்கரில் நடந்த போராட்டத்தில், மதமாற்றம் செய்வதை தடை செய்வதற்கு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர், நகரில் ஊர்வலமாக சென்றனர்.