இந்தியா

கருணைக் கொலை செய்யப்பட்ட 17 பன்றிகள்...கடவுளின் தேசத்தில் சோகம்...

தந்தி டிவி

எர ்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுதியில், பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணையில் உயிருடன் எஞ்சி இருக்கும் 17 பன்றிகளை கருணைக் கொலை செய்ய சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. அந்த வகையில், மாவட்ட கால்நடை பாதுகாப்பு அலுவலர் தலைமையில், 17 பன்றிகளும் கருணைச் கொலை செய்யப்பட்டு, குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதனிடையே பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவு வரையில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பன்றி இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிருந்து வேறு இடங்களுக்கு பன்றி கொண்டுச் செல்லப்பட்டதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா