இந்தியா

"நீட் தேர்வு - இந்தியா முழுவதும் 15,93,452 பேர் விண்ணப்பம்" - தேசிய தேர்வு முகமை தகவல்

இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்காக 15,93,452 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்காக 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அதில் தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர்2ம் தேதி முதல் ஜனவரி 6 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் திருத்தம் செய்வதற்கு வரும்15 ந் தேதி முதல் 31 ந் தேதி வரையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், மார்ச் 27ம் தேதி வெளியிடப்பட்டு, மே 3ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்றும், ஜூன் 4 அன்று முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ