மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, பொதுமக்கள் அமர்ந்திருந்த கொட்டகையின் ஒரு பகுதி திடீரென்று சரிந்து விழுந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை பிரதமர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.