Hydrabad Boy death 
இந்தியா

ரீல்ஸ் மோகத்தால் 14 வயது சிறுவன் பலி - ஐதராபாத்தில் சோகம்

ரீல்ஸ் மோகத்தால் 14 வயது சிறுவன் பலி - ஐதராபாத்தில் சோகம்

thanthitv

சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' செய்து புகழ்பெற ஆசைப்பட்ட 14 வயது சிறுவன், மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஐதராபாத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஐதராபாத், நாச்சாரம் மல்லாப்பூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் மிதுன், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் விதவிதமான வீடியோக்களைப் பதிவிடுவதில் மிதுன் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளான். இந்நிலையில், தனது நண்பர்களைப் போலவே தானும் ஒரு 'ரிஸ்க்' நிறைந்த வீடியோவை எடுத்து அதிக லைக்குகளைப் பெற வேண்டும் என ஆசைப்பட்டுள்ளான். இதற்காக தனது வீட்டின் பால்கனி கைப்பிடிச் சுவர் மீது ஏறி ஆபத்தான முறையில் சாகசம் செய்ய முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய சிறுவன், மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்தான். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மிதுன் பரிதாபமாக உயிரிழந்தான். ரீல்ஸ் மோகம் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING || நாளை சுட்டெரிக்கப்போகும் வெயில்.. வெளியான முக்கிய அறிவிப்பு -சேப்ட்டியா ஓட்டு போட போங்க

MK Stalin | விடிந்தால் தேர்தல்.. திமுகவினருக்கு CM ஸ்டாலின் போட்ட கட்டளை

Ajithkumar || Case திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு - சிபிஐக்கு கோர்ட் கொடுத்த பரபரப்பு உத்தரவு

Attack on Fishermen | நடுக்கடலில் கொடூர தாக்குதல்.. நாகை மீனவர்கள் படுகாயம்

Firecracker Accident || 13 பேரை காவு வாங்கிய பட்டாசு விபத்து .. கேரள அரசு எடுத்த முக்கிய முடிவு