இந்தியா

ஆந்திரா - தமிழக எல்லையில் லாரி கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி

வாணியம்பாடி அருகே லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தந்தி டிவி

ஆண் மற்றும் பெண் கூலி தொழிலாளர்கள் 30 பேருடன், ஆந்திர மாநிலம் நாயனூர் பகுதியில் இருந்து மாங்காய் ஏற்றி வந்த சரக்கு லாரி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வாணியம்பாடிக்கு வந்து கொண்டிருந்த இந்த லாரி, ஆந்திர எல்லை பகுதியான கங்குந்தி அருகே வந்தபோது சாலை ஓரம் இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு, ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 4 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியது. நள்ளிரவில் நடந்த இந்த பெரும் விபத்தால் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திர எல்லையில் சோகம் குடிகொண்டது. விபத்து நடந்த பகுதியில் இரண்டு மாநில போலீசாரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இருபது பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Delimitation Bill | Women Reservation | நாடே பரபரத்த.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

Salem | EPS | ``அதிமுக அரசு அமைந்தவுடன் தீபாவளி அன்று..'' | ஈபிஎஸ் சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்