இந்தியா

ரயில் நிலையத்தில் 1 வயது பெண் குழந்தை கடத்தல் - உ.பி.யில் அதிர்ச்சி

தந்தி டிவி

உத்தரப்பிரதேசம் ரயில் நிலையத்தில் ஒரு வயது பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் ஒரு வயது பெண் குழந்தை மற்றும் அவரது தாய் உறங்கிக் கொண்டிருந்தனர். குழந்தையின் தாய் கழிவறைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது பெண் குழந்தை அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அங்கு வந்த ஒருவர் பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு ரயிலில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குழந்தையை கடத்திய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்