செய்திகள்

பேச மறுத்த காதலி - தூக்கில் தொங்கிய இளைஞர்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதலியின் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட இளைஞர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காவுவிளைகாலனி பகுதியை சேர்ந்தவர் தனுஷ். கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலியை பார்க்க குலசேகரம் சென்ற தனுஷ், அவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் காதலி பேசாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், நீதிமன்றத்தை நாட போவதாகவும் தனுஷின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்