செய்திகள்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்

தந்தி டிவி

இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது...தஞ்சை கொண்டி ராஜ பாளையம் பகுதியில் உள்ள யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் விஸ்வரூப தரிசனத்தில் மூலவர் பெருமாள் காட்சி கொடுக்க திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திரு வேங்கடமுடையான் பெருமாள் கோயிலில் உற்சவர் பெருமாள் இரு தேவியருடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். வழிபட வந்த பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் ஜடாரி குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை