செய்திகள்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்

தந்தி டிவி

இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது...தஞ்சை கொண்டி ராஜ பாளையம் பகுதியில் உள்ள யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் விஸ்வரூப தரிசனத்தில் மூலவர் பெருமாள் காட்சி கொடுக்க திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திரு வேங்கடமுடையான் பெருமாள் கோயிலில் உற்சவர் பெருமாள் இரு தேவியருடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். வழிபட வந்த பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் ஜடாரி குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே