செய்திகள்

ரயில் மோதி மாடுகள் உயிரிழப்பு - 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் சப்தகிரி விரைவு ரயிலில் மாடுகள் சிக்கி உயிரிழந்ததால், ரயில் சுமார் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்ற சப்தகிரி விரைவு ரயில் திருத்தணிக்கு வந்தபோது, தண்டவாளத்தில் இருந்த 2 மாடுகள் அந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன. இதனால் ரயில் சுமார் 15 நிமிடங்களுக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயில்வே லெவல் கிராஸிங்குக்கு நேராக ரயில் நின்றதால் தண்டவாளத்தை கடக்க முடியாமல் சிரமப்பட்ட மாணவ-மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர், ரயிலில் ஏறி இறங்கி ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"