சென்னை பெசன்ட் நகரில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
சௌகார்பேட்டையில் இருந்து நண்பர்களுடன் காரில் சென்ற இளைஞர், பெசன்ட் நகர் கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரின் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்த நிலையில், நல்வாய்ப்பாக காரை இயக்கிய கல்லூரி மாணவர்களுக்கு காயமும் ஏற்படாமல் தப்பினர்.
விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.