சினிமா

போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்த அதிரடி - பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் ரெய்டு

போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்த அதிரடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

பாலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்து நின்ற போதைப் பொருள் விவகாரம், மற்ற திரையுலகத்தையும் விட்டுவைக்கவில்லை. நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் என பலரும் இதில் சிக்கினர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராயின் உறவினரான ஆதித்யா ஆல்வா என்ற நபருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் அவர், மும்பையில் உள்ள விவேக் ஓபராய் வீட்டில் பதுங்கி இருப்பது உறுதியானது. இதையடுத்து நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நடிகர் விவேக் ஓபராயின் வீட்டில் பெங்களூரு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் விவேக் ஓபராயின் உறவினர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. விவேக் ஓபராய், சமீபத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை