சினிமா

புது அவதாரம் எடுக்கும் விஜயகாந்த்! மீண்டு வருகிறார் கேப்டன்... எப்படி சாத்தியம்?

தந்தி டிவி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக மீண்டும் வெள்ளித்திரையில் விஜயகாந்த் மகிழ்விக்க இருக்கிறார்...

ஊமை விழிகள்... 1986 ஆம் ஆண்டு வெளியாகி மிரட்டிய க்ரைம் திரில்லர் திரைப்படம்...

பெண்களை கொல்ல வெறிபிடித்த

கண்களோடு புறப்படும் வில்லன்... சூனியக்காரி போன்ற தோற்றத்தில் எச்சரிக்கை மணியடிக்கும் பாட்டி... காலால் தரையில் பள்ளம் தோண்டும் குதிரையென எல்லாம் இரவில் எடுக்கப்பட்ட திரைப்படம் மிரள செய்திருக்கும்...

பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் எடுத்த திரைப்படத்தில் டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விஜய்காந்த்...

இளைமையிலே முதுமையான கதாபாத்திரத்தை எடுத்திருந்த விஜயகாந்த்... டி.எஸ்.பி.யாக பதிலுக்கு மிரட்டியிருப்பார்

விஜயகாந்த் நடிப்பில் 200 நாட்களை தாண்டி ஓடிய வெற்றிப்படங்களில் ஊமை விழிகளும் ஒன்று...

திரைப்படத்திற்கு கதையெழுதிய ஆபாவாணன், ஊமை விழிகள் பாகம் 2 மற்றும் 3 வெளியாகும் எனவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக விஜயகாந்தை மீண்டும் தத்ரூபமாக திரைக்கு கொண்டுவர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆபாவாணன் அறிவிப்பை அடுத்து, 1986-களில் மிரட்டியதுபோல்... ஊமை விழிகள் மீண்டும் மிரட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை