நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தானதாக செய்திகள் வெளியான நிலையில், தான் நலமாக இருப்பதாகவும், யாரும் கவலை அடைய வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் உந்தவல்லி என்ற பகுதியில் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தான் நன்றாக இருப்பதாகவும், கார் மட்டும் சேதமடைந்துள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஒரு பிரியாணி சாப்பிட்டு, தூங்கி எழுந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்..