Varalakshmi Sarathkumar | டெல்லி போராட்டத்தில் வெடித்த வன்முறை | விளாசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் #delhiprotest டெல்லி வன்முறை - நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் டெல்லி வன்முறை சம்பவத்திற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமைதியான போராட்டம் நடத்துபவர்கள் மீது வன்முறையை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எதிர்கால கல்வி முறைக்காக பேச்சுவார்த்தை மட்டுமே கோரும் இளைஞர்களின் பக்கம் தான் நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது அரசியல் பிரச்சனை அல்ல, மனிதநேயம் சார்ந்த பிரச்சனை என்றும், மௌனம் காக்காமல் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என்றும் வரலட்சுமி சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.