திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டு கால கலைப் பயணத்தை போற்றும் வகையில், சென்னையில் 'என்னோடு வா வீடு வரைக்கும்' என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில், அவருடைய படங்களில் முக்கிய அங்கமாக இருந்த பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, நடிகர் சூர்யா கலந்து கொண்டு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தாம் நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் இருந்து, அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல பாட்டிற்கு நடனமாடியதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.