சினிமா

"வடக்கன் என்ற மனநிலை.." திருத்தணி விவகாரம்.. கொதித்த பா.ரஞ்சித்

தந்தி டிவி

"வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலை சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும்"

வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். திருத்தணி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்கத்தவறிய ஆட்சியாளர்களே இதற்கு முக்கிய காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

நம் இடத்திற்குப் பிழைக்க வந்தவர்களை, நம் வாய்ப்புகளைப் பறித்துக்கொண்டவர்களாகக் கருதும் மோசமான மனநிலை உலகம் முழுவதுமே இருக்கிறது... இதைக் களைவதற்கான ஒரே வழி, மக்களுக்கிடையேயான சகோதரத்துவத்தை வளர்த்தெடுப்பதுதான் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரீல்ஸ் மோகத்தில் வன்முறையை தூண்டுபவர்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்".

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு