Tirupathi | Keerthi Shetty | திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த போது நடிகை கீர்த்தி ஷெட்டி கையில் இருந்த புத்தகம்
கையில் புத்தகத்துடன் திருப்பதியில் நடிகை கீர்த்தி ஷெட்டி சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி சாமி தரிசனம் மேற்கொண்டார். கையில் புத்தகம் ஒன்றை எடுத்துச் சென்ற அவர், சுவாமி தரிசனத்திற்குப் பிறகு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்களைப் பெற்றார். தொடர்ந்து அவருக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தரிசனம் முடித்து கோயிலில் இருந்து வெளியே வந்த கீர்த்தி ஷெட்டியை கண்ட ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது அவரது கையில் இருந்த புத்தகம் குறித்து கேட்டபோது, எந்த பதிலும் தெரிவிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.