தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருப்பதாக தாய்க்கிழவி பட நிகழ்ச்சியில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்..
சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் இணைந்து தயாரித்திருக்கும் தாய் கிழவி திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதில் படத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக சரத்குமார், சூரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சிவகுமார் முருகேசன், தனக்கு ஒரு விதை நெல்லாக சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படம் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்..
தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, நடிகை ராதிகாவின் நடிப்பு அசாத்தியமானது என பாராட்டினார்.